சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்ஸோவில் நடன ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்ஸோவில் நடன ஆசிரியர் கைது.!

சென்னையில் உள்ள நொளம்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி.நகரைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் நடன ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரிடம் நடனம் கற்று கொள்ள வந்த நான்கு வயது சிறுமி ஒருவர் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் படி தலைமை ஆசிரியர் நடன ஆசிரியரை அழைத்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். 

அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடன ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேணுகோபாலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வேணுகோபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dance master arrested for sexuall harassment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->