திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல்! சாலை மறியல் - போராட்டம்! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில், இருதரப்பினர்களுக்கு இடையே நடந்த மோதலில், இளைஞர் ஒருவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் புதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவின்போது அந்த கிராமத்தை சேர்ந்த இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் இரண்டு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஒரு தரப்பை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.

இதனை அடுத்து மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்களை கைது செய்வதற்காக, கடலூர் முதுநகர் போலீசார் இன்று காலை அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர். 

இது குறித்த தகவல் அறிந்த அந்த ஒரு தரப்பு பொதுமக்கள், தங்கள் பகுதிய இளைஞர்களை கைது செய்யக்கூடாது என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இளைஞர்களை கைது செய்யாமல், போலீசாரை தடுக்கும் விதமாக, ஊருக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் கடலூர் - சிதம்பரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த வந்த கடலூர் உயர் போலீஸ் அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாரிடம், நாங்கள் அளித்த பல்வேறு புகார்கள் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எங்களையே கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலை மறிகளை கைவிட்டு களைந்து செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினார், அதிகாரிகளின் உத்திரவாதத்தை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore muthunagar temple festival clash case


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->