குடும்பதகரற்றால் தற்கொலை செய்து கொண்ட பெண்.. காப்பாற்ற சென்ற கணவனும் பலி..!
Couple Death in Dindugal
குடும்பதகராற்றால் தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற சென்ற கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், மோளப்பாடியூரை சேர்ந்தவர் முத்துவேல். இவருக்கு திருமணமாகி தனலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். விவசாயியான முத்துவேலுக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அவரது மனைவி கண்டித்தும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவதன்று, இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால், கோபமடைந்த தனலெட்சுமி அங்கிருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துவேல் மனைவியை காப்பாற்ற குதித்துள்ளார். கிணற்றில் நீர் அதிகம் இருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
அக்கம்பக்கதினர் அளித்த தகவலின் படி, விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் ஒரு மணிநேர போரட்டத்திற்கு பின் அவர்களின் உடலை மீட்டனர். இருவரின் உடலையும் பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்த வைத்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது