காட்டுப்பகுதிக்கு கடத்திச்சென்று 9ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்.! கட்டிட தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறை சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(30). இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஜான்சன் சம்பவத்தன்று 14 வயதுடைய 9ஆம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, வீட்டில் விடுவதாக கூறி மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அவர் மாணவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த மாணவி இது குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு மாணவியை பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி ஜான்சனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Construction worker arrested for raping 9th class girl in kanniyakumari


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->