செல்வப்பெருந்தகை குறித்து அவதூறு பேச்சு - நெல்லையில் இபிஎஸ்க்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.!
congrass protest against eps in nellai
தமிழக சட்டசபையை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் போலீசார் அங்கு விரைந்து வந்து எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.

அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள், மாவட்ட துணை தலைவர்கள், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர், பொதுச்செயலாளர், தச்சை மண்டல துணைத் தலைவர், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
congrass protest against eps in nellai