கடலூர் அருகே சோகம்.! தனியார் சொகுசு பேருந்து மோதி கம்ப்யூட்டர் இன்ஜினியர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்து மோதி கம்ப்யூட்டர் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் அப்போகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ராகுல் (31). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சொந்த வேலைக்காக காரணமாக மேலரதவீதிக்கு சென்றுள்ளார். 

அப்போது அந்த வழியாக சிதம்பரம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிதம்பரம் டவுன் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Computer engineer killed in private bus collision in Cuddalore


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->