திருவாரூர் || குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி - பிணமாக மீட்பு.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் || குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி - பிணமாக மீட்பு.!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனன்-லட்சுமி தம்பதியினர். இவர்களுடைய மகள் பிரகதீஷ்வரி. இவர் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், பிரகதீஸ்வரி இன்று வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த டிராக்டர் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில், மின்கம்பம் உடைந்து மின்கம்பி குளத்தில் அறுந்து விழுந்துள்ளது. இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே குளத்தில் குளிக்கச் சென்ற தனது மகளை நீண்ட நேரமாக காணவில்லை என்று பதறிப்போன பெற்றோர்கள் குளத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மாணவி உயிரிழந்த நிலையில் குளத்தில் மிதந்துள்ளது. 

இதைப்பத்தி பெற்றோர்கள் கதறி அழுதுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து மின்வாரியத்துக்குத் தகவல் அளித்துள்ளனர். இதைகேட்ட உடனே அவர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து சிறுமியின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அதன் பின்னர் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்கச் சென்ற மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died in tiruvarur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->