கோவையில் அதிரடி! ரகசிய குடோனில் பதுக்கப்பட்ட 1,720 சிலிண்டர்கள் பறிமுதல்...! - சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே வெடித்த மோதலின் பின்னணியில் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் கடும் சிக்கல் உருவாகி, அதின் தாக்கம் உள்ளூர் சந்தைகளிலும் பிரதிபலித்தது. குறிப்பாக வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களில் கடும் பற்றாக்குறை நிலவி, அவற்றை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கும் செயல்கள் அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனை கட்டுப்படுத்துவதற்காக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் கலெக்டர் பவன்குமார் வழங்கிய அறிவுறுத்தலின்படியும், ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா வழிகாட்டுதலின்படியும், மதுரை மண்டல சூப்பிரண்டு ஸ்ரீநிவாச பெருமாள் மேற்பார்வையில், கோவை துணை சூப்பிரண்டு மரியமுத்து தலைமையில் காவலர்கள் விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாத காலமாக கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்ற அதிரடி சோதனைகளில், குடோன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,720 வர்த்தக சிலிண்டர்களும், 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலிண்டர் பதுக்கல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சிலிண்டர்களை பதுக்கி வைக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore 1720 cylinders stashed secret warehouse seized How did they get caught


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->