அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், எம்.எல்.ஏ மற்றும் அமைப்பு செயலாளர், அமைச்சர்கள், சென்னை தென் கிழக்கு செயலாளர், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், சென்னை மாநகர மேயர், செய்தி தொடர் இணைச் செயலாளர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM paid respect to Ambedkar statue


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->