சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியையின் மறைவுக்கு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

”சென்னையில் இன்று நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக நான்கு அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் கணவர்களுடன் சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களின் கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாது.

இந்த விபத்தில் ஆசிரியை உட்பட இருவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin compensation announce to died teacher family in vizhupuram


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->