சென்னை வரவுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர்: எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற 23ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வர உள்ளார். 

மேலும் அவர் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 24, 25ஆம் தேதிகளில் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல் கட்சிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பதூ சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Election Commissioner of India coming Chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->