எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோ நிலத்தை மீட்கும் விவகாரம்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறில் நெப்டியூன் ஸ்டூடியோவாக இருந்து பின்னர் மறைந்த தமிழக முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் கரங்களுக்கு வந்த பின்னர் பிரபலமாக திகழ்ந்தது சத்யா ஸ்டுடியோ. அந்த நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு வரை தமிழக அரசுக்கு ரூ.31,09,79,000 வாடகை பாக்கியை செலுத்த‌தாதால் நிலத்தை திருப்பி எடுக்க 2008ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சத்யம் ஸ்டுடியோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் "பல வருடங்களாக ரூ.23,939 வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2001 முதல் 2004 வரை ரூ.1,90,97,491 என வாடகை உயர்த்தப்பட்டது. தமிழக அரசின் தன்னிச்சையான இந்த வாடகை உயர்வை எதிர்க்கிறோம்" என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை நிலத்தை மீட்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ChennaiHC ask explanation in sathya studio land case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->