கஞ்சா புள்ளிங்கோவின் அட்டூழியங்கள்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிகாரி.. காலில் விழுந்து கதறிய புள்ளிங்கோஸ்..!!
Chennai Pullingow Arrest Accident police Injury
சென்னை முழுவதும் ஊரடங்கு கடுமையான முறையில் அமலாகியுள்ள நிலையில், காவல் துறையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் உள்ள புரசைவாக்கத்தை அடுத்துள்ள கெல்லீஸ் பகுதியில் வாகன காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில், வாக்கி டாக்கியில் தகவல் ஒன்று வந்துள்ளது.
இதில், இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் சாலை விதிகளை மதிக்காமல், காவல் துறையினரின் சோதனைக்கு உட்படாமல் தப்பியோடி வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கெல்லீஸ் சாலையில் போக்குவரத்து காவல் துறையினர் உஷாராகியுள்ளனர்.
இதனையடுத்து இரண்டு இளைஞர்களையும் காவல் துறையினர் மடக்கி பிடிக்க முயன்ற நிலையில், வாகனத்தை நிறுத்தாத புள்ளிங்கோக்கள் பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் குமரனின் மீது மோதவே, நிலைதடுமாறி ஆய்வாளர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல் அதிகாரி குமரனை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், புள்ளிங்கோக்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த ஜெயக்குமார் மற்றும் கொளத்தூரை சார்ந்த விஜய் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் கஞ்சா போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, காவல் துறையிடம் சிக்கியதும் காவல் அதிகாரிகளின் காலில் விழுந்து தங்களை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சியுள்ளனர். இவர்களுக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Pullingow Arrest Accident police Injury