சென்னை 8 வயது மாணவி பாலியல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தைச் சேர்ந்த தினேஷின் 8 வயது மகள், அருகிலுள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். மூன்று நாட்களுக்கு முன் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமி திடீரென மாயமானாள். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர்.

பின்னர், அருகிலுள்ள ஏரிக்கரை தெருவில் வசிக்கும் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜியின் வீட்டில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே உறவினர்கள் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். அவர் மயக்க நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களை கேட்டபோது அவர்கள் சரியாக விளக்கம் தரவில்லை. அதனால் சிறுமிக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின்போது மாணவியின் தாத்தா தாக்கப்பட்டதாக புகார் உள்ளது.

விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆணையின்பேரில், பெண் போலீசார் தலைமையில் விசாரணை நடைபெற்றது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறுமி, "மாலை 6க்கு பிறகு எனக்கு என்ன நடந்தது தெரியவில்லை, மயக்கமாயிற்று" என தெரிவித்ததால், மயக்க மருந்து வழங்கி தவறான செயல்களில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் மீது விரைவில் கைது மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், சிறுமியின் பெற்றோரின் மீதும் கடுமையான புகார்கள் பதிவாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai POCSO case Harassment Complaint SI


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->