சென்னை: மது போதையில் ரகளை: அடித்து உதைத்த ஆர்.பி.எஃப் காவலருக்கு குவியும் கண்டனங்கள்!
chennai korukkupettai train case
சென்னை மின்சார ரயிலில் மது போதையில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரை, ஆர்.பி.எஃப் காவலர் ஒருவர் நடைமேடையில் தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில், மதுபோதையில் பயணித்த தர்மன் (22) என்பவரை டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துள்ளார்.
அவரிடம் டிக்கெட் இல்லாததால் அபராதம் கட்டச் சொன்னபோது, அவர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துமீறிய ஆர்.பி.எஃப்: டி.டி.இ கொடுத்த தகவலின் பேரில் வந்த ஆர்.பி.எஃப் காவலருக்கும் இளைஞருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் அந்த இளைஞர் தப்ப முயன்றபோது, காவலர் அவரைத் தரையில் தள்ளி, பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரது கழுத்தில் கால் வைத்து மிதித்துத் தாக்கியுள்ளார்.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அந்த இளைஞர் மீது தண்டையார்பேட்டை ஆர்.பி.எஃப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர். தவறு செய்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, ஒரு காவலரே பொது இடத்தில் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
English Summary
chennai korukkupettai train case