#சென்னை || மனைவி இறந்த துக்கம்., தற்கொலைக்கு முயன்ற கணவன், மீண்டும் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரும் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆசீர்வாதம் (வயது 54). கடந்த 8ஆம் தேதி இவரது மனைவி இறந்துவிட்டார். மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள இயலாத ஆசீர்வாதம் கடந்த 9ஆம் தேதி விஷம் குடித்து மயங்கினார்.

ஆசீர்வாதத்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை மூலம் உயிர் தப்பினார். 

மேலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, கழிவறையில் உள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அவரது உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai husband suicide attempt twice


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->