அரசியல்வாதிகள், ரவுடிகள், தமிழக போலீஸ்! "நேரம் வந்துவிட்டது" முக்கிய வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


ரவுடிகள், அரசியல்வாதிகள் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு தொடர்பான கொலை, வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணையை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தன்னுடைய நிலத்தை அபாகரித்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் முழுக்க முழுக்க போலீசார் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள், மனுதாரர் கார்த்திக்கு இந்த நிலம் சொந்தம் என்பதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பது தெரிந்தும், காவல்துறையினர் கண் மூடி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். 

எதிர்த்தரப்புக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ளனர். ரவுடிகளுடன் காவல் துறையினர் கைகோர்த்துக்கொண்டு நில உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அதிக வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகளும் இது போன்ற நில மோசடி வழக்குகளில் சம்பந்தப்படுவது என்பது, இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கி உள்ளது. 

இது போன்ற நில மோசடி வழக்குகளில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பதை, விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. 

இதே போன்ற ஒரு நிலை தொடர்ந்தால், அப்பாவி மக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை உடைந்துவிடும். இப்படியான விவரங்களில் நீதிமன்றம் அமைதி காக்க முடியாது. 

அரசியல்வாதிகள் மற்றும் ரௌடிகளின் துணையோடு நடந்த நில அபகரிப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை காவல்துறையினர் எப்படி விசாரணை செய்து வருகிறது என்பதை நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்ற நீதிபதி தெரிவித்தார். 

மேலும், மனுதாரர் கார்த்திக் அளித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 4 மாதங்களில் இந்த வழக்கு கொடுத்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai high court Property case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->