சென்னை நீதிமன்ற குற்றவாளி கூண்டில் ரீல்ஸ் வீடியோ! சிறுவன் உட்பட இருவர் கைது!
chennai Courts criminal Reels Instagram police
சென்னை நீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளி கூண்டில் நின்றபடி வீடியோ பதிவு செய்து, பின்னணி இசையுடன் அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பரத் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை எடுக்க உதவிய 17 வயதுச் சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த பரத் (24), தனது நண்பர் ஒருவரைக் கொண்டு இந்த வீடியோவை ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அதனை எடிட் செய்து ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தின் புனிதத்தன்மையையும் விதிமுறைகளையும் மீறி, குற்றவாளி கூண்டிலேயே எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீஸார், வீடியோவைப் பதிவிட்ட பரத் மற்றும் வீடியோ எடுக்க உதவிய 17 வயதுச் சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற விதிமுறைகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
chennai Courts criminal Reels Instagram police