''சுதந்திரத்தின் போது மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும்''; யோகி ஆதித்யநாத் பேச்சு..!
Yogi Adityanath said that history would have been different if Modi had been the Prime Minister of India at the time of Independence
''சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.'' என உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்ற ‘பிரிவினை கொடுமை நினைவு நாள்’ நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில் கூறியதாவது;
அரசியல் அதிகாரத்துக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், சுதந்திரத்தின்போது நமது நாடு பிளவுபட்டதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும். யாராலும் இந்தியாவுக்கு சிறிதளவும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சர்தார் வல்லபாய் படேல் போன்ற ஒரு தலைவர் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியாவைப் பிளவுபடுத்த அனுமதித்திருக்க மாட்டார் என்றும், காங்கிரஸ் தலைவர்களின் செயலுக்காக நாடு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது என்று கூறியுள்ளார்.
சுதந்திரத்தின்போது வங்கம், வங்காள மக்கள் அதிகம் வசித்த பகுதியாக இருந்தது. இந்துக்கள் அதிகம் வசித்த கிராமங்கள் அனைத்தும் கட்டாயமாக வங்கதேசத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அதீத ஆர்வம் காட்டிய காங்கிரஸால் இந்த அவமானகரமான செயல் செய்யப்பட்டது என்றும், நாடு அந்தக் கட்சியின் மீது நம்பிக்கை வைத்திருந்தது, ஆனால் அக்கட்சி அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்ததாக யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Yogi Adityanath said that history would have been different if Modi had been the Prime Minister of India at the time of Independence