தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
Chance of rain in 7 districts of tamilnadu for next 3 hours
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும், வெப்ப சனலம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, வருகின்ற 4ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chance of rain in 7 districts of tamilnadu for next 3 hours