மதுபானக் கடைகளில் சிசிடிவி கேமரா - வெளியானது அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மதுபான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள, மதுபான மற்றும் தனியார் பார்களுக்கு மதுபான நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நாடாளுமன்ற தேர்தலின்போது சட்டவிரோதமான மதுபாட்டில் விற்பனை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, மதுபானக் கடைகளில் சிசிடிவி கேமராவை பொருத்தவும், அதுதொடர்பான புகைப்படங்களை அனுப்பவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிசிடிவி பொருத்தாவிட்டால், மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cctv camera fit in tamilnadu tasmac


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->