சென்னையில் பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு.!
case file on bjp executive in chennai thiruvanmiyur
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தனது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நாடு முழுவதும் அமலில் இருக்கும் தேர்தல் விதிகளை மீறுவதாக அரசியல் கட்சியினர் மீது அவ்வப்போது வழக்கு பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவான்மியூரில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர் ராஜனை ஆதரித்து பேனர்கள், கொடிக்கம்பங்கள், பாஜக சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவர் குமரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
case file on bjp executive in chennai thiruvanmiyur