சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது முதின்(32). இவர் நேற்று முன்தின இரவு தனது காரில் மெரினா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது முகமது முதின் கார் மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் குமார் (59) மற்றும் ஆட்டோவில் இருந்த பாபு (35) என்பவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து முகமது முதின் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car auto accident in Chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->