கார் மீது லாரி மோதி விபத்து.. பெண் காவலர் பரிதாப பலி.. திருச்சியில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் காவலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி . இவர் காட்டுப்புத்தூர்  காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவருடன் காரில் வக்கம்பட்டி பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில்  கார் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் வந்த லாரி ஒன்று அவர்களின் கார் மீது மோதியது.  இந்த விபத்தில் சுகந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் படுகாயங்களுடன் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car accident in trichy


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->