தமிழகத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள மாலதி ஹெலன்..! - Seithipunal
Seithipunal


சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஆளுநரின் செயலர் கிர்லோஷ்குமார் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமைச்செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவு அறிக்கை;

தமிழக ஆளுநரின் செயலராக உள்ள ஆர்.கிர்லோஷ்குமார் தற்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலராகவும், சமூகநலத் துறை கூடுதல் இயக்குநர் சரண்யா அரி இப்போது பெரம்பலூர் ஆட்சியராகவும், அப்பதவியில் இருந்த என்.மிருநாளினி இப்போது அரியலூர் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஆவின் இணை மேலாண் இயக்குநர் எஸ்.கவிதா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பொதுத்துறை மரபுப்பிரிவு துணை செயலர் வீர் பிரதாப் சிங் இப்போது திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், சென்னை வடக்கு மண்டல துணை ஆணையராக இருந்த கட்டா ரவி தேஜா இப்போது கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malathi Helen Appointed as Chennai District Collector


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->