தொடர்மழை பரிதாபம்: இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்கள்! - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த இடிபாடுகளில் சிக்கி 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சென்னை இசிஆர் இந்திரா காந்தி தெருவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில் மழையில் நனைந்து கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. 

இதில் அங்கு தங்கியிருந்த 20 வயது மற்றும் 30 வயது இளைஞர்கள் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 
2 இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

building collapsed 2 youths died 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->