மகளை திட்டிய தம்பியை கொலை செய்த அண்ணன்..சென்னையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மகளை கண்டித்த தம்பியை கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராசு.  இவருக்கு திருமணமாகி கனகா என்ற மனைவியும் மகாலட்சுமி(5) என்ற மகளும் உள்ளனர்.  மகாலெட்சுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ராசுவும் அவரது தம்பி விக்கி(19)யும் ஓரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

விக்கி மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அண்ணன் மகள் மகாலட்சுமி செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, விக்கி மகாலெட்சுமியிடம் இருந்து செல்போனை பிடிங்கியுள்ளார். அதனால், குழந்தை அழுதுள்ளார். வீட்டிற்கு வந்த ராசு குழந்தையிடம் ஏன் அழுகிறாய் என கேட்டுள்ளார்.

சித்தப்பா அடித்ததாக கூறியதால் ராசு தம்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அடித்து உதைத்ததுடன் பெல்ட்டால் விக்கியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.  தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ராசுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother Killed his younger Brother in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->