வாணியம்பாடி || பேருந்து நிலையத்தில் உள்ள இனிப்பக்கம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள இனிப்பக்கத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள இனிப்பகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர். இதனால், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பேருந்து நிலைய காவல்துறையினர் இனிப்பகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது யார்? திட்டமிட்ட சதியா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bomba attack in vaniyambadi bus stand sweet shop


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->