முதியவர்களுக்கு போர்வை மற்றும் காலணி..MLA அனிபால் கென்னடி வழங்கினார்! - Seithipunal
Seithipunal


உப்பளம் தொகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அரசு உதவித் தொகை பெறும் முதியவர்களுக்கு சமூகநலத்துறை மூலமாக போர்வை மற்றும் காலணிகளை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கினார் . .

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அரசு உதவித் தொகை பெறும் முதியவர்களுக்கு சமூகநலத்துறை மூலமாக போர்வை மற்றும் காலணி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் புதுச்சேரி உப்பளம் தொகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அரசு உதவித் தொகை பெறும்  முதியவர்களுக்கு சமூக நலத்துறை மூலமாக போர்வை மற்றும் காலணிகளை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் அந்தந்தப் பகுதியைச் சார்ந்த முதியவர்கள் சிரமம் இன்றி பெற்றுக் கொள்ள ஏதுவாக அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் நேரில் சென்று பயனாளிகளுக்கு வழங்கினார்.அவருடன் அங்கன்வாடி உயர்  அதிகாரி செல்வக்குமார், அங்கன்வாடி ஆசிரியர்கள், மற்றும் அவைத்தலைவர் ஹிரிகிருஷ்ணன், காங்கிரஸ் பிரமுகர் சலீம் பாஷா ,துணை செயலாளர்கள்  ராஜ், (எ) ஆரோக்கியராஜ்,நிசார், கிளை செயலாளர்கள் இருதயராஜ் , காத்தலிங்கம் , நேத்தாஜி நகர் 3 தலைவர் கணேசன், ஆகியோர் உடனிருந்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Blankets and footwear for the elderly MLA Anibal Kennedy provided


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->