முதலில் தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் தமிழக முதல்வரே - போட்டு தாக்கிய ராதிகா சரத்குமார்! - Seithipunal
Seithipunal


முதலில் தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் தமிழக முதல்வரே, பின்பு இந்தியாவை கைப்பற்றலாம் என்று, மதுரை, திருமங்கலம் பிரசாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

பிரச்சாரத்தின்போது ஜே.பி.நட்டா பேசுகையில், "பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு நாடு வந்ததற்கு, பிரதமரின் தலைமை பண்பே காரணம்" என்று தெரிவித்தார்.

விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள பெண்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றனர். முதலில் தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் தமிழக முதல்வரே. தமிழ்நாட்டின் கதையை எழுதுவதைப் போல, நாட்டின் கதையையும் திமுக எழுத நினைக்கிறது" என்று ராதிகா சரத்துக்குமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Radhika Sarathkumar Election campaign in Viruthunagar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->