தமிழகத்தில் இனி 12ம் வகுப்பு தேர்வே வேண்டாம்! சமயம் பார்த்து பதிலடி கொடுக்கும் பாஜக!
BJP Narayanan Thirupathy Say About NEET and 12th Exam Scam
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததால் மறுத்து தேர்வு அல்லது தேர்வை ரத்த செய்யக்கோரும் திமுக, தமிழகத்தில் 12 ம் தேர்வின் மோசடிக்கு என்ன பதில் சொல்ல போகிறது என்று, பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நீட் தேர்வில் ஏதோ ஒரு மாநிலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்காக ஒட்டு மொத்தமாக நாடு முழுதும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும், நீட் தேர்வையே தடை செய்ய வேண்டும் என்று ஓலமிட்ட திமுகவினருக்கு ஒரு கேள்வி..

தமிழகத்தில் 2023ம் ஆண்டு நடைபெற்ற 12 ம் வகுப்பு தேர்வின் விடைத் தாள்களை மாற்றி மோசடி செய்ததற்காக நான்கு அரசு கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்து உள்ளனர்.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் இது போன்று நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற 'திமுக' வின் நீட் மறு தேர்வு வாதத்தின் அடிப்படையில் 2023ல் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் மீண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுத திமுக அரசு உத்தரவிடுமா? அல்லது தமிழகத்தில் இனி 12ம் வகுப்பு தேர்வே வேண்டாம் என கொள்கை முடிவு எடுக்குமா?
எதை செய்தாலும், சொன்னாலும் அதனுடைய விளைவுகள் எப்படி இருக்கும் என புரிந்து கொண்டு பேச வேண்டும். அதை விடுத்து, திராவிட மாடல் அரசியல் என்ற பெயரில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மலிவு அரசியல் செய்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்க முயற்சிக்க கூடாது" என்று நாராயணன் திரிபாதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Say About NEET and 12th Exam Scam