எலியை அடிக்க முயன்ற சிறுவன்.. பறிபோன தாய் உயிர்.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


எலியை அடிக்க முயன்ற தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பொழிச்சலூர், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 35). இவர் தனது வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வரும் அட்டகாச எலியை பிடிக்க முயன்றுள்ளார்.

தனது 12 வயது மகனோடு சேர்ந்து எலியை அடித்து கொல்ல வேண்டும் என எண்ணி அடிக்க முற்பட்ட போது நெற்றியில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரது மகன் நடந்ததை தனது தந்தையிடம் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Beat rate mother death in Chennai


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->