ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான விவகாரம்; 09 பேருக்கு ஜாமீன் மறுப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன்பாக தான் நடித்த இறுதி படமான 'ஜனநாயகன்' படம் 2026 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாகவில்லை. அத்துடன், மறு ஆய்வு குழு முன் ஆய்வில் இருந்த போது கடந்த ஏப்ரல் மாதம், சட்டவிரோதாமாக இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் படி, 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகிய 09 பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த ஒன்பது பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறை கால நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், கைதாகி 42 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார்கள் என்றும், குற்றம்சாட்டபட்ட சிலர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது, ஒரு ஆர்வத்தில் தான் படத்தை பார்த்தனர். ஆனால், சமூக வலைதளங்களில் பகிரவில்லை என வாதிடப்பட்டது.

இந்த ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் ஆஜரான விஜயன் சுப்பிரமணியன், 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில், 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து உள்ளனர்; சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது; 

ஆர்வத்தில் திரைப்படத்தை பார்த்துவிட்டோம் என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது; டெலிகிராம் சமூக வலைதள பக்கத்தில் முழு படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார்கள்; முக்கிய நபரான உமா சங்கர் இன்னும் தலைமறைவாகவுள்ளார்; கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என அட்சேபம் தெரிவித்து வாதிட்டார்.

அடுத்து, காவல்துறை தரப்பில், ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பார்ப்பது என்பது குற்றம் தான்; அப்படி பார்த்தது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்கள்; வழக்கில் முக்கிய குற்றசாட்டுக்கு ஆளாகியுள்ள உமாசங்கர் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்; அவரையும் கைது செய்தால் முக்கிய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன; எனவே, மனுதாரர்கள் எவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனநாயகன் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வழக்கு விசாரணை ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.சக்திவேல், 09 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bail Denied to 9 Individuals in the Case of the Film Jananayagan Being Released Online


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->