பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க விழிப்புணர்வு..நீதிபதி செல்வம் பங்கேற்பு!
Awareness to eradicate violence against womenJudge Selvams participation
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மகாலட்சுமி கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் நீதிபதி செல்வம் கலந்துகொண்டு பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மகாலட்சுமி கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க மற்றும் பாலின சமத்துவத்தை பரப்ப மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்வு ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்விற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பும் அதேபோல் சட்ட உரிமைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.
சமூகத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள் என பெருமிதமாக கூறினார். அதேபோல் பெண்களின் உரிமைகள் மற்றும் சட்ட அடிப்படை பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவான உரைகள் கூட்டத்தின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டு கலாசார நிகழ்ச்சிகளும், மாணவர்களின் பங்கேற்பும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன மேலும் பெண்கள் மீது நடைபெறும் வன்முறைகளை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் என்ற கட்டுரை விழிப்புணர்வு காணொளி நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டு இந்த பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பது மாணவிகளிடையே சமூக மற்றும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக மாற்றத்திற்கு வழிகாட்டும் வகையில் அமைந்ததாக இருந்தது..
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா மற்றும் சட்ட அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்தனர்..
English Summary
Awareness to eradicate violence against womenJudge Selvams participation