அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இளைஞருக்கு கத்திக்குத்து.! - Seithipunal
Seithipunal


அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராற்றில் ஒருவருக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மதுரை உட்பட 10 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அனுமதி வழங்கி உள்ளது. 

ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வடநாடு, ஜல்லிக்கட்டு, எருது விடும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி அளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார். 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள், 430 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராற்றில் ஒருவருக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாடுகளை அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராற்றில் ஒருவருக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த தெய்வேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AVANIYAPURAM JALLIKATTU 2


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->