ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு
Auto car accident in Chengalpattu
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது, புதுச்சேரியில் இருந்து அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்ட நிலையில், ஆட்டோவில் பயணித்த பெண் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்த இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் உயிரிழந்த இரண்டு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Auto car accident in Chengalpattu