நூதன முறையில் தங்கத்தை கடத்தல் முயற்சி..எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!
Attempt to smuggle gold in a novel way how they are thinking about it
தங்கத்தை நூதன முறையில் மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாட்டில் போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சமீப காலமாக விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சோதனை செய்யும் போது ஏராளமான போதை பொருட்கள் தங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது, குறிப்பாக இதுபோன்ற செயலில் நடிகை ஒருவர் சமீபத்தில் மாட்டிக் கொண்டார், அவர் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
தங்க கடத்தல் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் தங்கள் யுத்தியை பயன்படுத்தி பல்வேறு வழிமுறைகளில் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி தங்கத்தை கடத்தி சிலர் தப்பி விடுகின்றனர், சிலர் மாட்டிக் கொள்கின்றனர், மாட்டிக் கொள்பவர்கள் சிலர் உடமைகளில் மறைத்து வைத்தும், சிலர் உடலில் ஏதாவது ஆபரேஷன் மூலம் செய்து உள்ளே புகுத்தி அந்த தங்கத்தை வெளியே எடுத்து வருகிறார்கள். அப்போது சோதனை செய்யும் போது மாட்டிக்கொள்கிறார்கள் இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது, இந்த நிலையில் நூதன முறையில் தங்கத்தை கடத்தல் முயற்சி நடந்துள்ளது,
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தபயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது பயணி ஒருவரை நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தபோது மொத்தம் 99 தங்கத்திலான போல்ட், நட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அவை தங்கம் என்பது தெரியாமல் இருக்க போல்ட், நட்டு மீது சாம்பல் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அவரிடம் இருந்து சுமார் 900 கிராம எடைகொண்ட 99 தங்க போல்ட், நட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.
இந்த தங்கத்தை நூதன முறையில் மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Attempt to smuggle gold in a novel way how they are thinking about it