சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாகவும், சாராயம் காய்ச்சப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடம்பூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த பகுதியில் உள்ள விவசாயி ஆண்டிசாமி என்பவர் வீட்டிற்கு பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் மரவள்ளி செடிகளுக்கு இடையே கஞ்சா செடியை பயிரிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மரவள்ளி செடிக்கு இடையே இறந்த 120 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 60 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். இதைத்தொடர்ந்து ஆண்டிசாமியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrested farmer who grew cannabis illegally in erode


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->