ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது – நாட்டுத் துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல்
Armstrong murder case Two more arrested country gun 4 bullets seized
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், நாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் உயிரிழந்தார்.
இந்நிலையில், ஏற்கெனவே சிறையில் உள்ள புதூர் அப்பு தனது வழக்கறிஞரிடம் நாட்டுத் துப்பாக்கியை ஒப்படைத்ததாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில்,
- அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த தமிழரசன் (30),
- ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழரசன் வீட்டில் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்போ செந்திலை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இக்கொலை வழக்கில் நடந்துவரும் அதிரடி நடவடிக்கைகளால், குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் பிடியில் அகப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Armstrong murder case Two more arrested country gun 4 bullets seized