மதுபோதையில் வெடித்த வாக்குவாதம்! அரிவாள் தாக்குதலில் மீனவர் பலி...! - 3 பேர் கைது...!
argument broke out during drunken argument fisherman killed sickle attack 3 people arrested
தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் கிராமத்தைச் சேர்ந்த இருதயராஜின் மகன் ஜாய்விக்டோரியன் (26), கடலையே வாழ்வாதாரமாகக் கொண்ட இளம் மீனவர்.
திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து வல்லம் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி இரவு நண்பர்களுடன் கடற்கரை பகுதியில் இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்று இரவு மது அருந்திக் கொண்டிருந்த நேரத்தில், நண்பர்களுக்கிடையே திடீரென வாய்த்தகராறு வெடித்து, அது கடுமையான மோதலாக மாறியது.
கோபத்தின் உச்சத்தில் சென்ற மூவர் கொண்ட குழு, முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜாய்விக்டோரியனை பலத்த காயங்களுக்கு உள்ளாக்கி அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்த வெள்ளத்தில் உயிர் போராட்டத்தில் இருந்த ஜாய்விக்டோரியனை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவலர்கள் முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ஜாய்விக்டோரியன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதனையடுத்து, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த லிக்சன் (23), ஐஸ்பர் (29) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய மூவரை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
argument broke out during drunken argument fisherman killed sickle attack 3 people arrested