ரூ.992 கோடி ஊழல்! ரூ.500 கோடி ஊழல் பணம்! கூடுதல் ஆதாரத்தோடு முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த புகார் - அறப்போர் இயக்கம் அதிரடி! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ரேஷன் துறையில் ரூபாய் 992 கோடி அளவிற்கு நடைபெற்று வரும் நெல் போக்குவரத்து ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் மார்ச் 2025 இல் லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் எழுப்பி இருந்தோம். 

இன்றைய தினம் அறப்போர் இயக்கம் மேலும் ஒரு கூடுதல் ஆதாரத்தோடு முதல்வர் மற்றும் இதர அதிகாரிகளுக்கு கூடுதல் புகார் அளித்துள்ளோம். ஜூன் 30, 2025 க்குள் இந்த ஊழல் டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி உள்ளோம். இதன் மூலமாக ஊழலில் 400 முதல் 500 கோடி ரூபாய் இழக்காமல் நம் வரி பணத்தை காப்பாற்றலாம். 

ஜூன் 2025 க்குள் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு அரசு கொண்டுவராவிட்டால் அறப்போர் இயக்கம் ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் என்னும் பெயரை தமிழ்நாடு கிறிஸ்டி சப்ளைஸ் கார்ப்பரேஷன் என்று மாற்ற உள்ளோம்.

ஜூலை 7 2025 அன்று தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷன் தன் பெயரை மாற்ற ஏதுவாக தமிழ்நாடு கிறிஸ்டி சப்ளை கார்ப்பரேஷன் என்னும் பெயர் பலகையை அச்சிட்டு அறப்போர் இயக்கம் அதன் நிர்வாக இயக்குனருக்கு நேரில் சென்று பரிசாக வழங்க உள்ளது.

ஜூலை 2025 முதல் இந்த கார்பரேஷனில் உள்ள ஊழல் அதிகாரிகள் அனைவரும் கிம்பளத்திற்கு பதில் நேரடியாக கிறிஸ்டி நிறுவனத்திடமே தங்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளட்டும். அரசு நம் வரி பணத்தை கொடுத்து வீணடிக்க வேண்டாம்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arappor complaint to CM MK Stalin for scam


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->