#அரக்கோணம் : ரயில் நிலையத்தில் அலறியடித்து ஓடிய மக்கள்.! திடீரென நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு.!
Arakkonam railway station smoking issues
நேற்று மதியம் 2.30 மணியளவில் அரக்கோணம் வழியே சென்னையிலிருந்து மும்பை செல்கின்ற ரயில் முதல் பிளாட்ஃபாரத்திற்கு வந்து நின்றது. அதன் பின், அந்த இரயில் அரக்கோணத்திலிருந்து மீண்டும் 2.28 மணியளவில் புறப்பட முயற்சித்தது. அப்பொழுது, ரயில் இன்ஜினுக்கு அருகில் இருந்த பெட்டியிலிருந்து புகை வந்துள்ளது.
இதை பார்த்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். ஏதாவது, அசம்பாவிதம் நிகழ்ந்து தீ விபத்து நடந்திருக்கலாமோ.? என அச்சமடைந்த ரயில் பயணிகள் ரயிலிலிருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் ரயிலை அப்படியே நிறுத்தி விட்டு, எதனால் புகை வந்தது என்பது பற்றி ரயில் ஓட்டுநர், ஊழியர்கள் மேற்க்கொண்டனர். அப்பொழுது, சிறிய அளவில் தீயணைப்பு கருவி உடைந்த காரணத்தால் அதில் இருந்து தீயை அணைக்க பயன்படுத்தக்கூடிய பவுடர் வெளியேறி உள்ளதால் இந்த புகை ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட தீயணைப்பு கருவி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. அதன் பின் அந்த ரயில் 9 நிமிட கால அவகாசத்திற்கு பின் அங்கிருந்து புறப்பட்டது. இதன் காரணமாக அந்த ரயில் நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Arakkonam railway station smoking issues