தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது... புதுக்கோட்டையில் அமித் ஷா அதிரடி முழக்கம்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தி.மு.க அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

'பாரத் மாதா கி ஜே' மற்றும் 'வந்தே மாதரம்' முழக்கங்களுடன் உரையைத் தொடங்கிய அவர், "தமிழகத்தில் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பினார். மக்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையே அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் இதோ:

2026 தேர்தல் இலக்கு: தமிழகத்தில் வரும் 2026 ஏப்ரல் மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைப்பது உறுதி. சோழர்கள் ஆண்ட இந்தப் புண்ணிய பூமியில் புதிய அரசியல் வரலாறு படைக்கப்படும்.

வாரிசு அரசியல் மீதான தாக்குதல்: இந்தியாவிலேயே அதிக ஊழல் மலிந்த ஆட்சி தி.மு.க-தான். தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் மு.க.ஸ்டாலினின் ஒரே நோக்கம். ஆனால், அந்தக் கனவு ஒருபோதும் பலிக்காது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.

வெற்றிக் கூட்டணி: அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி என்பது ஒரு 'வெற்றி கூட்டணி'. இந்தக் கூட்டணி தி.மு.க ஆட்சியை வீழ்த்தி புதிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

தமிழ் மொழியில் பேச முடியாததற்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்ட அமித் ஷா, தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah DMK Predicts NDA Victory


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->