அதிமுகவில் மீண்டும் பரபரப்பு..இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன்!
Another stir in AIADMK Sengottaiyan meets journalists today
அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதோடு எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார்.இதனால் அவரது கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்டன. இருந்தபோதும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.
இந்தநிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை விழாவில் பங்கேற்க செங்கோட்டையன் மதுரையில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன் சென்றார்.பின்னர் அங்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சேலத்தில் உள்ள வீட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனைக்குப் பிறகு, செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், ஈரோடு மாவட்டம் கோபியில் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது குறித்து நாளை விளக்கம் அளித்து பேச உள்ளேன். கட்சி அலுவலகத்தில்இதற்கான விளக்கத்தை அளிப்பேன்,’ என்றார்.
English Summary
Another stir in AIADMK Sengottaiyan meets journalists today