குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரையில் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் கணேசன் (71). இவர் நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி குளத்துக்குள் தவறி விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து மகள் மீனாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்குமுன்பாக மதுரை செல்லூர் சிவகாமி தெருவை சேர்ந்த 11 வயது சிறுவன் கம்மாயில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An old man drowned in a pool while going for a bath


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->