மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் கண்காட்சி..பார்வையிட்ட கனிமொழி எம்.பி.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை  கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் 6-வது தூத்துக்குடி புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த  புத்தக திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படக் கண்காட்சி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியின் சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி இன்று திறந்து வைத்தார்.

“தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற 6-வது புத்தகத் திருவிழா தொடர்பான வாசகங்கள் அடங்கிய ராட்சச பலூன்களை கனிமொழி எம்.பி. பறக்க விட்டார்.அதனை தொடர்ந்து  புத்தக அரங்குகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தார். மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வருகைதந்த பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். 

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An exhibition showcasing the prosperity of the district visited by MP Kanimozhi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->