முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்... நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அதிமுகவினர்..!
AIADMK pays homage at Jayalalithaa memorial
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலில் செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபப்டுள்ளது.
தமிழகத்தின் முன்னள் முதல்வரும், அதிமுகவின் பொதுசெயலாலருமான ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016ம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாள் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி அவர் மறைந்தார். இன்று ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. இதனை ஓட்டி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் காலை 10 மணிக்கு அஞ்சலில் செலுத்த இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் பல நலதிட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.
ஓபிஸ் மற்றும் ஈபிஸை தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரனும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
English Summary
AIADMK pays homage at Jayalalithaa memorial