சினிமா பாணியில் ரூ.1 கோடி கேட்டு எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்!
ADMK SP Vleuimani Crime TN Police
அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து, கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலுமணியை ஜூலை 30ஆம் தேதி குண்டு வெடிப்பில் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதைத் தவிர்க்க ரூ.1 கோடி பணம் தர வேண்டும் எனக் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பணம் தரப்படாவிட்டால், அவருடைய குடும்பத்தினரை மூன்று மாதங்களுக்குள் கொலை செய்வோம் என்றும் அந்த மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக புறநகர் மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் உள்ளிட்டோர், கோவை மாவட்ட காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர். அதிமுக வட்டாரத்தில் இந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் கடிதம் வந்த இடம், அது அனுப்பிய நபர் யார் என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
ADMK SP Vleuimani Crime TN Police