அதிமுகவை அசைக்க முடியாது - செல்லூர் ராஜு.! 
                                    
                                    
                                   admk ex minister sellur raju press meet in madurai
 
                                 
                               
                                
                                      
                                            அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-"அதிமுக சின்னத்தை எப்போதும் யாராலும் முடக்க முடியாது. 
முடக்குவதற்கான சந்தர்பங்கள் இருந்தது; ஆனால் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு நல்லதை செய்வார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவார். 

எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது. 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை; 
முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக தலைவர் விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது" என்றுத் தெரிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       admk ex minister sellur raju press meet in madurai