ரெயில் பயணம் இனி எளிது..! மதுரை–பெங்களூரு வந்தே பாரத்தில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!
Additional coaches added to Madurai Bengaluru Vande Bharat
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, மதுரை–பெங்களூரு வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதனால், மதுரையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்குமான வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண் 20671/20672) 11-ந்தேதி முதல் 8 கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
அதேபோல், மங்களூர் சென்ட்ரல்–திருவனந்தபுரம் வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண் 20631/20632) 9-ந்தேதி முதல் 4 கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
Additional coaches added to Madurai Bengaluru Vande Bharat